Thursday, December 11, 2008

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tuesday, December 2, 2008

அல்ஹாஜ் மவ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ஆலிம் ம‌ன்ப‌இ

ந‌ம‌தூரைச் சேர்ந்த‌ திருச்சி ட‌வுண் காஜி அல்ஹாஜ் மவ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ஆலிம் ம‌ன்ப‌இ அவ‌ர்க‌ள் நேற்று புனித‌ ஹ‌ஜ் பய‌ண‌ம் மேற்கொண்டுள்ளார்.

அவ‌ர‌து ப‌ய‌ண‌ம் சிற‌ப்புற‌ வாழ்த்துகிறோம்.

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்

Friday, July 4, 2008

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.

இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, June 25, 2008

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!




இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
www.muduvaihidayath.blogspot.com

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-

ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:

பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:

காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:

'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.

தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

Monday, May 19, 2008

நன்றியுடன் ஒரு மடல்

பெறுநர்

தலைவர்,
நிர்வாகிகள் மற்றும்
அனைத்து உறுப்பினர்கள்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்

பேரன்புடையீர் !

அஸ்ஸலாமு அலைக்கு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துபாய் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள பல அத்தாட்சிகளையும் மற்றும் பல ஆச்சர்யமான, அபூர்வமான இடங்களையும் பார்க்கக்கூடிய பாக்கியம் பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ் !

கடந்த 26 - 03 - 2008 புதன்கிழமையன்று சென்னையிலிருந்து தாய் ஏர்வேய்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு துபாய் சென்றடைந்து பிறகு 10 - 04 - 2008 வியாழனன்று ஓமன் சென்று ஒரு வாரம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் தம்பி ஹஸன் அஹ்மது வீட்டில் தங்கியிருந்து பின்பு 17-04-2008 வியாழன்று மீண்டும் துபாய் வந்து ஒரு மாத காலம் தங்கி கடந்த 16-05-2008 வெள்ளியன்று நலமே தாயகம் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ் !

'ஒருவர் செய்த உதவிக்கு நன்றி செலுத்தாதவருக்கு அல்லாஹ் நன்றி செய்யமாட்டான்' என்ற நபி ( ஸல் ) அவர்களின் பொன்மொழிக்கேற்ப எனது இப்பயணத்தில் உடலால், உணவால், வாகனத்தால் பிற உபசரிப்பால் உதவி செய்து ஆதரித்த நல்ல உள்ளங்களுக்காக நான் அல்லாஹ்விடன் துஆச் செய்கின்றேன். மனம் நிறைந்த நன்றியையும், சலாத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் சென்னையிலிருந்து துபாய் பயணம் புறப்பட்டபோது கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் மாமு எம்.எஸ். நய்னா முஹம்மது அவர்களின் மகனார் அஸ்லம் அவர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டார். துபாய் நேரம் மதியம் 2.00 மணிக்கு நாங்கள் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளியான போது எங்களை வரவேற்பதற்காக காத்திருந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், பொருளாளர் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் சேட், பக்ருதீன், இஸ்மத்துல்லாஹ், ரியாள், ஹிபத்துல்லாஹ், சபீர் அலி மற்றும் பலரை சந்தித்தபோது உள்ளம் மகிழ்ந்தேன். விமான நிலையத்திலேயே தக்பீர் முழக்கத்துடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிலை கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !!

எனது இப்பயணத்தில் முதுகுளத்தூர் மற்றும் பல ஊர் சகோதரர்களை சந்தித்தேன். அவர்களால் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் அவர்களை குறிப்பிட்டுச் சொல்வதால் அது மிகையாகாது. ஹிதாயத் அவர்களின் ஏற்பாட்டின் மூலம்

1. நான்கு முறை ஜும்ஆவில் பயான் மற்றும் தொழுகை நடத்தவும்
2. அமீரகம் ஷார்ஜா சீமான் அமைப்பின் 10 ஆம் ஆண்டு விழாவின் மாணவர் நிகழ்ச்சியில் நடுவர்
3. அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை நிகழ்வில் வாழ்த்துரை
4. ஈடிஏ அஸ்கான் சமுதாயக்கூடத்தில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையில் இரு முறை பயான்
5. கோட்டைப் பள்ளிவாசலில் பயான்
6. சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி துபாயில் நடத்திய கூட்டத்தில் வாழ்த்துரை
7. ஈடிஏ அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மருத்துவம் நிகழ்ச்சியில் வாழ்த்துரை

ஆகிய பல பொது நிகழ்ச்சிகளில் பயான் செய்ய, வாழ்த்துரை வழங்க சந்தர்ப்பம் கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ் !


17.05.2008 வியாழன்று ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், மஸ்கட் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து ஈடிஏ டி பிளாக்கில் எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் உபசரிப்பு, அனைவருக்கும் உணவு, பொன்னாடை, பரிசளிப்பு இத்தனைக்கும் மேலாக AWARD பட்டயம் வழங்கி கௌரவித்து 'ஆசானை' கண்ணியப்படுத்திய நல் உள்ளங்களை அல்லாஹ் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்துவானாக.

உழைத்துப் பொருளீட்ட வந்த நாட்டில் பிறந்த ஊரை, உறவை நினைவு கூர்ந்து உதவி, உபகாரம் செய்வதற்காகவே
'ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்' என்னும் அமைப்பை உருவாக்கி

1. 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கட்கு ஆண்டு முழுவதும் இலவச தனிப்பயிற்சி ( டியூசன் ) நடத்து ISLAMIC STUDY CENTRE
2. மாணவ, மாணவிகளுக்காக நூலகம்]
3. ரமளானில் நலிந்தோருக்காக ( பித்ரா ) அரிசி மற்றும் பொருள்
4. கல்லூரிக் கல்வியை வறியோரும் பெற்றிட பொருளுதவி

இப்படி சமுதாயத்திற்காக பல உதவிகள் உபகாரங்களை செய்து வரும் இந்ஹ்ட ஜமாஅத்தின்

கௌரவ தலைவர் : ஹெச். ஹஸன் அஹமது
தலைவர் : என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன்
உதவித்தலைவர் : எஸ். ஷம்சுத்தீன்
பொதுச்செயலாளர் : முதுவை ஹிதாயத்
பொருளாளர் : ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் சேட்
ஆடிட்டர் : ஹெச். அமீர் சுல்தான்
ஒருங்கிணைப்பாளர் : ஹெச். இப்னு சிக்கந்தர்


மற்றும் அனைத்து பொறுப்புதாரிகள், உறுப்பினர்கள், பேராளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து துஆச் செய்கின்றேன். எனது மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் மிகவும் சுறுசுறுப்பாக ஜமாஅத்தின் செயல்பாடுகள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்வுகள், நிக்காஹ், பொது நிகழ்ச்சி, வஃபாத் போன்ற செய்திகளை உடனுக்குடன் இணையத்தளத்தில் வெளியாக்கி ஊரறியச் செய்கிறார் என்பதை விட உலகறியச் செய்கிறார் என்பதே சரி. இவரின் இந்த சேவை ஊர், உறவு தாண்டி பிற ஊர் மக்களுக்கும் சென்றடைகிறது என்பதை நான் நேரில் கண்டேன். இவரது பொதுநலத்தொண்டைப் பாராட்டி துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்திலிருந்து இவருக்கு இவர் சார்ந்திருக்கும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) மூலம் CERTIFICATE OF APPRECIATION எனும் பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நமது மக்கள் நாடு கடந்தும் பாராட்டுப் பெறுகிறார்கள் என்பது கண்டு மகிழ்ந்தேன். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றேன். அல்ஹம்துலில்லாஹ் !

ஓமனில் தங்கியிருந்தபோது மஸ்கட்டிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து நபி அய்யூப் ( அலை ) , ஆலி இம்ரான், தாஜுதீன் ( சேரமான் ) போன்றோரை 'ஜியாரத்' செய்திட அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ள சிறப்புகளை, குறிப்புகளைப் பார்த்து பக்குவம் பெற்றிட என்னுடன் சலாலா வந்து ஜமாஅத்தின் கௌரவத் தலைவர் தம்பி ஹெச். ஹஸன் அஹமது அவர்கள் மீண்டும் 17-04-2008 வியாழன்று ஈடிஏ அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற ஜமாஅத் கூட்டத்திற்கு அதிசிறத்தையுடன் ஓமனிலிருந்து அவரின் துணைவியார் பரக்கத் ரஹ்மத்நிஸா, மகள் ஆயிஷா மரியம், மகன் உமர் முக்தார் ஆகியோருடன் வந்திருந்து கலந்து கொண்டமைக்கு அவர்கட்கு துஆவும் நன்றியும் உரித்தாகுக.

ஜமாஅத்தின் தலைவராக இருந்து செயல்படும் சகோதரர் நிஜாமுத்தீன் ஆலிம் ஒரே நேரத்தில் பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு 2, 3 டெலிபோனில் பேசிக் கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டே ஜமாஅத்திற்காக ஆலோசனை வழங்குவதுடன் தேவைகளை நிறைவு செய்வதிலே மிக ஆர்வம் காட்டி வழி நடத்தும் நல்லவர். தனிப்பட்ட ரீதியிலும், அவர்களின் நண்பர்களுடன் இணைந்தும் அவர்களின் சேவை மிக்க மேலானது. அல்லாஹ் கபூல் செய்வானாக. அல்ஹமதுலில்லாஹ் ! அவர்கட்கு எனது நன்றியும் துஆவும் உரித்தாகுக.

அடுத்து

உதவித்தலைவர் ஷம்சுத்தீன் தலைவராகவே துடிப்புடன் செயல்படும் பாசமுள்ள சகோதரர்.

ஆடிட்டர் அமீர் சுல்தான் அமைதியாகவே இருந்து கடமையில் கருத்தாயிருந்து சேவை செய்யும் நேசமுள்ள தம்பி

பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் சேட் நம்பிக்கையுடன் அமைதியாக செயல்படும் அருமை மகன்

ஒருங்கிணைப்பாளர் இப்னு சிக்கந்தர் காலம் தாழ்ந்து அமீரகம் வந்து அனைவரும் இணைய பாலமாக செயல்படும் பாசமிகு தம்பி.

நிறைவாக

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் அங்கங்களான அனைத்து உறுப்பினர்கள், பேராளர்கள் மற்றும் எனது ஓமன் பயணத்தின் போது பல கார்களுடன் குடும்பத்துடன் வந்திருந்த ந்ல உள்ளங்கள், பல இடங்கட்குச் செல்லும் போதெல்லாம் உறவாக ஒன்றி குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்த சகோதர, சகோதரிகள்

மேலும் 25.04.2008 வெள்ளியன்று ஷார்ஜாவில் தேரிருவேலில் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பை ஏற்படுத்தி உடனே அந்த நிகழ்விலேயே எனக்கு பாராட்டும், உபசரிப்பும் வழங்கிய ஐக்கிய அரபு அமீரக தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தாருக்கும் மேலும் உரிமையோடும் பாசத்தோடும் விருந்தளித்து உபசரித்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி முன்னாள் ஆசிரியப் பெருமக்கள் திரு செல்லம் மற்றும் அபரஞ்சி இவர்களது மகன் துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் பணியாற்றும் இளங்கோவன் அவரது தம்பி குமார் ஆகியோருக்கும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் நினைவு கூறவேண்டிய அனைவருக்கும் நன்றி ! துஆ !! வாழ்த்துக்கள் !!!


வஸ்ஸலாம்

அன்புடன்

எஸ். அஹ்மத் பஷீர் சேட்


முகவரி :

'ஹஜ்ரத் சேட் ஆலிம் சாஹிப்'
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்

தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495

muduvaisaitalim@gmail.com

Friday, May 16, 2008

முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது
வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2008



துபாய்: துபாயில் நடந்த விழாவில், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு, சிராஜுல் உம்மத் என்ற விருது வழங்கப்பட்டது.

17ம் தேதி வியாழக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார்.

தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக் கவிதையினை வாசித்தார்.

'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணமான இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.

பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


நன்றி தட்ஸ் தமிழ்.காம்

Tuesday, May 6, 2008

துபாயில் இன்று ........................

துபாய் அஸ்கான் டி பிளாக்கில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் இன்று ( 07 மே 2008 ) முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ அவர்கள் ‘இஸ்லாத்தில் நிம்மதி' எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சி சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையினால் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முஹம்மது மஃரூப் அவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்.

Friday, May 2, 2008

ஷார்ஜாவில் தேரிருவேலி ஜமாஅத் உதயம்

ஷார்ஜாவில் தேரிருவேலி ஜமாஅத் உதயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகராம் ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள தேரிருவேலியைச் சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து ஐக்கிய அரபு அமீரக தேரிருவேலி ஜமாஅத் ஒன்றினை ஏற்படுத்தினர்.

தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்ப்யீ அவர்களது ஆலோசனையின் பேரில் தேரிருவேலி ஜமாஅத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும் வரை மௌலவி அலி பாதுஷா மன்பயீ அவர்கள் ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

மௌலவி சாதிக் மன்பயீ அவர்கள் ஹஜ்ரத் பஷீர் சேட் ஆலிம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மௌலவி பஷீர் சேட் ஆலிம் தனது ஏற்புரையில் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் அமீரகத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போன்று தேரிருவேலி ஜமாஅத்தினரும் சமுதாயப் பணிகளில் ஈடுபட முனைந்திருப்பதைப் பாராட்டினார். முதுகுளத்தூர் சமுதாய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அளிப்பதைப்போன்று இன்று மாவட்டம் முழுவதும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதுகுளத்தூர் மற்றும் தேரிருவேலி ஜமாஅத்தினர் இத்தகைய பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஊருக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள பல பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் முதுகுளத்தூர் ஜமாஅத் மேற்கொண்டுவரும் சமுதாயப்பணிகளை எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் முஹம்மது அலி, ஹபிப் திவான், ஏ. அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் உள்ளிட்ட தேரிருவேலி மற்றும் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் கலந்து கொண்டனர். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.












Wednesday, April 30, 2008

துபாய் அஸ்கான் தொழிலாளர் முகாமில்



துபாய் சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ 25.04.2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் உரை நிகழ்த்தினார். அப்பொழுது ஈமானின் படித்தரங்கள் குறித்து விவரித்தார்.

Tuesday, April 29, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சியில்...........





துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சியில்...........

நாள் : 25 ஏப்ரல் 2008
வெள்ளிக்கிழமை

இடம் : அஸ்கான் டி பிளாக்

உரை நிகழ்த்தியோர் :

டாக்டர் பி. எம். சையது அஹமத்
டாக்டர் மாஹின் செய்யது இஸ்மாயில்
மௌலவி அல்ஹாஜ் எஸ். பஷீர் சேட் ஆலிம் மன்பயீ

வரவேற்புரை : ஏ. லியாக்கத் அலி - பொதுச்செயலாளர் - ஈமான்

நிகழ்ச்சி தொகுப்பு : யஹ்யா முஹ்யித்தீன் - விழாக்குழு செயலாளர்

பங்கேற்றோர் : மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி

நன்றியுரை : கீழக்கரை ஏ. ஹமீது யாசின்









Friday, April 25, 2008

ஹஜ்ரத் பஷீர் சேட் ஆலிம்........

நமதூர் பெரிய பள்ளிவாசல் மஹல்லாவில் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக நம் பள்ளிவாசலின் இமாமாக் இருந்து நம் அனைவருக்கும் தீன்நெறி சேவை செய்து வரும் கண்ணியத்திற்கும் மரியாதைக்குமுரிய ‘பெரிய ஹஜ்ரத்' அவர்களை நாம் அனைவரும் அறிவோம்.

ஒரு காலத்தில் பள்ளிக்கல்வியைக் கூர் ( 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு ) நிறைவு படுத்தாத நிலையில் மத்ரஸாவிற்கு சென்று ஓதி ஆலிம்கள் உருவாகி வந்தனர். அந்த காலகட்டத்தில், அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி. 11வது வகுப்பு வரை படித்து கல்லூரிக்கு செல்வதற்கு பதில் அரபிக் கல்லூரிக்கு சென்று லால்பேட்டை மன்பவுல் அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் மார்க்க கல்வி கற்று, சுயமாக தொழில் தேடிக் கொண்டிருந்த நேரம் !

நமதூர் பெரிய பள்ளியின் இமாமாக சிறப்பாக செயல்பட்டு தமது சிறந்த கல்வியறிவாலும், பேச்சாற்றலாலும் நமதூர் மக்களின் உள்ளங்களிலும், தமிழகம், பர்மா, மலேசியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்ற ‘சேட் ஆலிம் ஹஜ்ரத்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய மௌலானா ஷம்சுத்தீன் சேட் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள் 1976 ஆம் ஆண்டு இறைவனின் நாட்டப்படி தாருல் பனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்த காரணத்தால், தகப்பனார் விட்டுச்சென்ற தீன்நெறி சேவையை தமையனார் பொறுப்பேற்று ஊர் மக்களுக்கு நல்வழி காட்டும்படி கூறிய ஜமாஅத்தார்களின் அன்புக்கட்டளையை தட்டமுடியாமல் ஏற்று, இன்று வரை சுமார் 33 ஆண்டுகள் நமதூர் மஹல்லாவில் சிறப்பாக சேவையாற்றி வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் அழகிய உயர் குணத்தின் மூலம், நம் வீட்டில் ஒருவராகவும் நம் இன்ப துன்பங்களில் நமக்கு ஆறுதலாகவும், அனைவருக்கும் ஆசானாகவும், தீன்நெறி வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் ஹஜ்ரத் அவர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சேவை மனப்பான்மையையும், திறமையையும் மதித்து தமிழக அரசு ‘தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்' பதவியை கொடுத்து கௌரவித்தது.1975 முதல் இரண்டாண்டுகள் அப்பதவியை அலங்கரித்து அரசுக்கு அரிய பல ஆலோசனைகளை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிரிந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு உதவி செய்து ஹஜ் கடமையை அனைவரும் பரிபூரணமாக செய்திட தமிழக அரசால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இரண்டு வழிகாட்டிகளில் ஹஜ்ரத் அவர்களும் ஒருவராவார்கள். அச்சமயம் தானும் ஹஜ் செய்து மற்ற மக்களையும் திருப்தியுடன் ஹஜ் செய்ய வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்கள்.

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா என்னும் ஆலிம்களின் சபையின் தலைவர், செயலாளர் என பல கட்டங்களில் பல வகையான பொறுப்புக்களை வகித்து சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள். மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஷரீஅத் கவுன்சில் என்னும் மார்க்க தீர்ப்பாயம் ஆரம்பித்தது முதல் இன்று வரை அதன் உறுப்பினர்கள் சிலரில் ஒருவராக ஹஜ்ரத் அவர்களும் பொறுப்பேற்று, நமது சமுதாய மக்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஜமாஅத்தில் ஏற்படும் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு ஷரீஅத் அடிப்படையில் தீர்ப்புக்கூறி குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றார்கள்.

கல்வி கற்க வசதியில்லாத ஏழை எளிய மாணவர்கள் இவர்களைத் தேடி வரும்போது நமது சமுதாய பிரமுகர்களிடம் உதவி பெற்றுக் கொடுத்து பல மாணவர்களின் வாழ்வில் கல்விக் கண் திறந்துள்ளார்கள்.

அதே போன்று ஏழைக்குமர்களின் பெற்றோர்களும் தங்களின் குமர்காரியம் நிறைவேற உதவிதேடி வரும்போதும் தன்னால் முடிந்தவரை நம் சமுதாயப் பிரமுகர்களிடம் உதவியைப் பெற்றுக் கொடுத்து ஏழைக்குமர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்கள்.

நமதூரில் கடந்த 15 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் நைனா முஹம்மது காதரம்மாள் டிரஸ்டின் மார்க்க ஆலோசகராகவும், மேற்படி டிரஸ்டின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மானியா எத்தீம்கானாவின் முதல்வராகவும் இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.

அன்பாலும், பாசத்தாலும் அனைவரிடமும் பழகும் உன்னத உயர் பண்புகளாலும் ‘தனக்கு நிகர் தானே' என்னும் அளவுக்கு நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கண்ணியமிகு ஹஜ்ரத் அவர்களின் துபாய் வருகை நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே ! அல்ஹமதுலில்லாஹ் !!

அவர்களை துபாய் வாழ் முதுகுளத்தூர் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக வரவேற்பதிலும், கௌரவிப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நீடித்த சுகத்தையும் கொடுத்து நம் அனைவருக்கும் கண்குளிர்ச்சியாக ஆக்கிவைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆச் செய்கின்றோம்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
சார்பில்

மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி ஆலிம்
மார்க்க ஆலோசாகர்

Thursday, April 24, 2008

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html


துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பின் சார்பில் இன்று (ஏப்ரல் 25) மாலை மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அஸ்கான் டி பிளாக்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT) உரையாற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் ஆகியோரும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712

யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888



படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html


http://www.kayalpatnam.com/shownews.asp?id=1742

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

















துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தட்ஸ்தமிழ்.காம்

English | हिन्दी | ಕನ್ನಡ | മലയാളം | தமிழ் | తెలుగు





Home Blogs Bookmarks Classifieds Cricket Entertainment Living News Shopping Travel Videos More

செய்திகள்


தமிழகம் இந்தியா உலகம் இலங்கை விளையாட்டு

முதல் பக்கம் » செய்திகள்

தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலி - 15 பேருக்கு பாதிப்பு
சென்னை அருகே இரு கிராமங்களில் நடந்த அரசினர் தட்டம்மை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...
சோனியாவுக்கு ராஜீவ் கொலையாளிகள் நன்றிக் கடிதம்
கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி அறுப்பு!
வெடி மருந்து குடோனில் தீ- 3 பேர் படுகாயம்

முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

போலீஸ் பிடியிலிருந்து கஞ்சா கைதி தப்பியோட்டம்
முத்துக்கருப்பனை அவமதித்த கேரள அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்

முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

www.thatstamil.com

இணைய இதழில் விருது பெற்ற செய்தி


http://thatstamil.oneindia.in/news/2008/04/24/world-muthukulathur-imam-honoured-in-dubai.html


முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது
வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2008



துபாய்: துபாயில் நடந்த விழாவில், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு, சிராஜுல் உம்மத் என்ற விருது வழங்கப்பட்டது.

17ம் தேதி வியாழக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார்.

தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக் கவிதையினை வாசித்தார்.

'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணமான இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.

பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Tuesday, April 22, 2008

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது






துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.


சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.


'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.


பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

Sunday, April 20, 2008

துபாய் ஜும்ஆ அல் மஜித் செண்டரில்....

துபாய் ஜும்ஆ அல் மஜித் செண்டரில் பழங்கால திருக்குர்ஆன் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை சிராஜுல் உம்மத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ 20 ஏப்ரல் 2008 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். உடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் சென்றார்.











துபாய் செண்ட்ரல் பள்ளியில் சிராஜுல் உம்மத்




துபாயில் செண்ட்ரல் பள்ளி அல் நஹ்தா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தியப் பிரமுகரால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியின் முதல்வராக தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் கோயம்புத்தூரைச் சேர்ந்த மிர்சா காலிப் முதல்வராக இருந்து வருகிறார். தலைமையாசிரியராக காயல்பட்டணத்தைச் சேர்ந்த நுஸ்கி இருந்து வருகிறார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் மிர்சா காலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியை சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ 20.04.2008 ஞாயிறன்று பார்வையிட்டார். அப்பொழுது பள்ளி முதல்வர் காலிப்பைச் சந்த்திது உரையாடினார்.

Saturday, April 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, April 16, 2008

மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 17, 2008 வியாழக்கிழமை மாலை மஹ்ரிஃப்
தொழுகைக்குப்பின்னர் சுமார் 7.15 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் ( லூலூ
சென்டர் பின்புறம் ) தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள முதுகுளத்தூர்
முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற
உள்ளது.


இந்நிகழ்ச்சியில் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர் எஸ்.
சம்சுதீன், பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், பொருளாளர் ஏ.
அஹமத் இம்தாதுல்லாஹ் சேட், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான்,
ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், செயற்குழு உறுப்பினர்கள்
ஜாஹிர் ஹுசைன், எம். காஜா நஜுமுதீன், எஸ்.என். பக்ருதீன், ஹபிப்,
முஹம்மது, மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி, ரஹ்மத்துல்லாஹ்
உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்த உள்ளனர்.

சிறப்பு விருந்தினராக மஸ்கட்டிலிருந்து கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹமது அவர்க்ள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


நிகழ்ச்சிக்குப் பின்னர் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலதிக விபரம் பெற : 050 51 96 433

அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா



அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா


துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் வரும் ஏப்ரல் 5மே தேதி கவிஞர் அபிவை டி.எம்.எம்.தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் நடக்கும் இந்த விழாவை சே.ரெ. பட்டணம் மணி, மீரா. அப்துல் கதீம், இ. இசாக், பாரத்,
குத்தாலம் அஷ்ரப் அலி, கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்கள்
ஏற்பாடு செய்துள்ளனர்.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ்.தாஜுதீன் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0331-dubai-tamil-poets-association-to-felicitate.html

ஹசன் டிப்பா அடக்கத்தலக்கதில்




ஓமன் பகுதியின் ஹசன் டிப்பாவில் ஷஹீதானவர்களை ஜியாரத் செய்தபோது

நாள் : 07 ஏப்ரல் 2008
திங்கட்கிழமை

பிதியா பள்ளி மிம்பர் அருகே




புஜைரா அருகேயுள்ள பிதியா பள்ளி அமீரகத்தில் 1400 வருட பழமை வாய்ந்த பள்ளி. அப்பள்ளியை கடந்த 07 ஏப்ரல் 2008 திங்கட்கிழமையன்று ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அஜ்மான் செயற்குழு உறுப்பினர் ஏ. ஜஹாங்கீருடன், முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ அவர்கள் சென்று வந்தார்கள்.

1400 வருட பழமை வாய்ந்த பள்ளியானாலும் இன்றும் அதில் தொழுகை நடைபெற்று வருவது அதன் தனிச்சிறப்பாகும்.

கோர் பக்கான் கடற்கரை ஓரத்தில் ......



ஏப்ரல் 7, 2008

திங்கட்கிழமை

Sunday, April 13, 2008

துபாய் இந்திய தூதரக அதிகாரியுடன் மௌலவி பஷீர் சேட் ஆலிம்

துபாய் இந்திய தூதரக அதிகாரியுடன் மௌலவி பஷீர் சேட் ஆலிம்




துபாயில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஐக்கிய அரபு அமீரக அரசினால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தின் போது துபாய் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து பணியாற்றிய அமைப்புகள் மற்றும் சேவையாளர்களைக் கௌரவப் படுத்தும் முகமாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு. வேணு ராஜாமணி கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார். ஈமான் அமைப்பின் சார்பில் கல்வித்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் ) கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றனர்.

இந்நிகழ்வின் போது தாயகத்திலிருந்து வருகை புரிந்த முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ கலந்து கொண்டார்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம், இந்திய துணைத்தூதரக அதிகாரி கன்சல் ( லேபர் & வெல்பேர் ) பி.எஸ். முபாரக், இந்திய சமூக நல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கே. குமார், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.