அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 17, 2008 வியாழக்கிழமை மாலை மஹ்ரிஃப்
தொழுகைக்குப்பின்னர் சுமார் 7.15 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் ( லூலூ
சென்டர் பின்புறம் ) தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள முதுகுளத்தூர்
முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற
உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர் எஸ்.
சம்சுதீன், பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், பொருளாளர் ஏ.
அஹமத் இம்தாதுல்லாஹ் சேட், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான்,
ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், செயற்குழு உறுப்பினர்கள்
ஜாஹிர் ஹுசைன், எம். காஜா நஜுமுதீன், எஸ்.என். பக்ருதீன், ஹபிப்,
முஹம்மது, மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி, ரஹ்மத்துல்லாஹ்
உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்த உள்ளனர்.
சிறப்பு விருந்தினராக மஸ்கட்டிலிருந்து கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹமது அவர்க்ள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரம் பெற : 050 51 96 433
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment