Tuesday, August 3, 2010

அல்குர்ஆனின் மாதம்

அல்குர்ஆனின் மாதம்


முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான்.

இது நோன்பின் மாதமாகும்,

இது அல்குர்ஆனின் மாதமாகும்,

இது பொறுமையின் மாதமாகும்,

இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,

இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,

இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: 'எண்ண முடியுமான சில நாட்களாகும்' (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை
மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்,
நரகத்திற்குரியவர்கள் விடுதலை,
பாவங்களுக்கு பரிகாரம், நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு,
நன்மையில் நிறைவான மாதம்...

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு,நோன்பு பரிந்து பேசும்,
நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை,
கணக்கின்றி கூலி வழங்கப்படும்,நோன்பின் கூலி சுவர்க்கம்,நரகத்தை விட்டு பாதுகாப்பு,
மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்,
நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி,கஸ்தூரியை விட சிறந்த வாடை,
நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு...

நோன்பாளி செய்யவேண்டியவைகள்

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்,
அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்
ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
தான தர்மம் செய்தல் ,,அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்

No comments: